----------------------- கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள் ----------------------- மனதில் இருள் ஆடையில் வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் மாறவில்லை கிழிந்த ஆடை @@@ ----------------------- கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள் ----------------------- தேர் திருவிழா தேர்தல் திருவிழா திருடர்கள் ஜாக்கிரதை ^^^ பரிணாம வளர்ச்சி உண்மை அடிக்கடி தாவுகிறார் கட்சி தலைவர் ^^^ தேர்தலுக்குமுன் நியதி தேர்தலுக்கு பின் மறதி தேர்தல் வாக்குறுதி ^^^ திறந்த வீட்டுக்குள் நுழைந்தது வோட்டு கேட்டு வீட்டுக்குள் வேட்பாளர்
குறட்கூ கவிதைகள் ............ புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார். .... திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது. காதல் கரிநாள் ஆனது ..... 2) உறவுகள் பறிபோனது. காதல் வந்தது. .... 3) நொடி மூச்சு நிலையில்லை. காதல் நிலையானது. ... 4) கண்ணால் காதல் வந்தது. இதயம் நொறுங்கிப்போனது. ... 5) நித்திரையில் சிரித்தேன். திட்டி எழுப்பினார் அம்மா @ கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக