குறட்கூ.க்கள்
குறட்கூ கவிதைகள் ............ புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார். .... திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது. காதல் கரிநாள் ஆனது ..... 2) உறவுகள் பறிபோனது. காதல் வந்தது. .... 3) நொடி மூச்சு நிலையில்லை. காதல் நிலையானது. ... 4) கண்ணால் காதல் வந்தது. இதயம் நொறுங்கிப்போனது. ... 5) நித்திரையில் சிரித்தேன். திட்டி எழுப்பினார் அம்மா @ கவிப்புயல் இனியவன்